Tuesday, May 21, 2019

Tai Chi - Healer Baskar

அய்யா ஹீலர் பாஸ்கர் அவர்கள் முன்னிலையில் பழனி தாய் சி உறுப்பினர்கள் தாய் சி பற்றிய விளக்கமும், பயிற்சியும் .







Tuesday, October 3, 2017

அன்பின் நண்பர்களே..
வணக்கம்.
 நான் தாய்ச்சி என்னும் தற்காப்பு கலையை செய்யும் படம்  போட்டால், அது பற்றி பேசினால் ம் நீங்கள் தாய்ச்சியை propagate செய்கிறீற்களா, அதன் விளம்பர தாரரா என்றெல்லாம் கேட்கிறார்கள், சிலர் நக்கலுடன் , சிலர் சீரியஸாக, சிலர் அப்பாவியாக..ஆம் அப்படித்தான், தாய்ச்சி செய்வதை படம் போட்டு விளம்பரம்தான் செய்கிறேன். ஏன் ? நான் அனுபவித்த ஒன்றை, அதன் நல்ல பலனை, நல்ல விஷயத்தை, அடைந்த பயனை மற்றவர்களுக்கு சொல்வதில் என்ன  தவறு.
எல்லோரும் உடல் நலத்துடன் இருக்கவேணும் என்ற எண்ணத்தில் சொல்கிறேன் நட்புகளே.

    எல்லோருக்கும் ஓர் உண்மையை சொல்லிக்கொள்ளுகிறேன். ஒருக்கால் நான் தாய்ச்சி செய்யாமல் இருந்திருந்தால், சிலசமயம் நான் உயிரோடு இருந்திருக்கலாமோ என்னவோ. ஆனால் இப்பவளவு ஆரோக்கியமாக, புற்றுநோயக்கு முன்பு இருந்ததைவிட இன்னும் பலமாக இருக்கிறேன் என்றால், ஒரு மாதத்தில் சுமார் 13, 500 கி.மீ கூட அலுப்பின்றி , 18 மாவட்டங்கள் சென்னை தவிர அனைத்து இடங்களுக்கும் பேரூந்திலேயே , அதுவம் அரசுப் பெருந்தில்தான் பணிக்கிறேன் என்றால் அது நிச்சயமாய் தாய்ச்சி தந்த கொடைதான். அதுவே உடலையும், மனதையும் முன்பை விட இரும்பாககி உடல்நலத்தை அதிகரித்து உள்ளது.

  தாய்ச்சியின் போது  உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் செயல்பட்டு உடற்பயிற்சி செய்கிறது. ஒரு செல் கூட ஓய்வெடுப்பதில்லை. அது செய்யும்போது செய்யபப்டும் concentration ,மனதின் ஒருமுகத்தன்மை, யோகாவில் கூட ஏற்படாது. ஏனெனில் தாய்ச்சி செய்யும்போது, உங்களின் கவனம் சிதறுண்டால் , அடுத்த நிலை செயலப்பாட்டுக்கு செல்லமுடியாது. அதில் உள்ள '28 form  "என்ற முறையில், 8 நிமிடத்தில், 28 வகையாக அசைவுகளை உடல் செய்யவேண்டும். மனம் எங்கோ போய் உலாவ சென்றுவிட்டால், எப்படி அடுத்த stage /நிலை செல்வது. அதனை விட்டுவிடுவோம்.அல்லது தடுமாறிவிடுவோம்.

 8 form ல், 2 நிமிடத்தில், 8 அசைவுகள்./ செயல்பாடுகள் . 85 form ல், 21 நிமிடத்தில், 85 அசைவிலும், அவற்றின் செயல்பாடுகளும். பேன்டை கழட்டிவிடும். இது செய்யும்போது உடல் வியர்க்கும், ஆனால் இதயத்துடிப்பு அதிகரிப்பதில்லை. முக்கியமாக, வயதாவதினால் ஏற்படும் முதுமையால், மூட்டு எலும்புகள் தேய்மானமாகி, இறுகி ,கால்களை மடக்க முடியாமல், வலி ஏற்படும். தாய்ச்சி செய்ப்பவர்களுக்கு,எலும்பு தேய்மானம் ஏற்படாது. ஏனெனில், எலும்புகள்  தொடர்ந்து அசைந்து கொண்டு இருப்பதால், தேய்மானம் ஏற்படாது, வலியும் உருவாகாது.

   தாய்ச்சி செய்யும்போது அதிக கவனத்துடன் செய்வதால், நினைவாற்றலும் அதிகரிக்கிறது. முதுமைக்கான எந்த மாற்றத்தையும், துன்பத்தையும் உடல் சந்திக்காது. அப்படியே ரப்பர் போல உடல் வளையும்.மிகை அழுத்தம் குறைகிறது. பக்கவாதக்காரர்கள் மற்றவர்கள் துணையின்றி நடக்க முடிகிறது. இங்கு நான் தாய்ச்சிக்கு வந்த பின்னர் 20 வயது வாலிபர், நடக்க்கவே முடியாமல், அடுத்தவர் துணையுடன் ,தொப்பம்பட்டியிலிருந்து பக்கவாதம் ஏற்பட்டு  வந்தார்.தாய்ச்சி செய்ய வந்தார்/ வந்த ஒரு மாதத்தில் தானாகவே நடந்தார். எனக்குத் தெரிந்து பழனியில் பக்க வாதம் ஏற்பட்டு இங்கு வந்த 4 பேர் நன்கு குணமாகி,இப்போது திரும்பியே பார்ப்பதில்லை.

    தாய்ச்சியென்னும் சீன  தற்காப்பு கலையில் ஒரு பாடத்திட்டம்,அதில் செய்முறைத் தேர்வு என்பதெல்லாம் தெரியாமல், உயிர் காக்க, அதைவிட, வலி நிறைந்த நேரத்தை மறக்க,  தாய்ச்சி செய்ப்பவர்களை வேடிக்கை, புதிய நண்பர்களை  ,  பார்க்கவே தாய்ச்சி செய்யுமிடம்  அங்கு போனேன். பின் மெதுவாக செய்தேன் அப்போதெல்லாம் என்னால் நடக்க கூட முடியாது. கீழே விழுந்தால்,எலும்பை கூடையில்தான் அள்ளணும் ,எனவே கவனமாக இருங்கள் என மருத்துவர் அறிவுறுத்தி இருந்தார். துவக்கத்தில் ரவி மாஸ்ட்ரும், சிவா மாஸ்டரும்,மிக மெதுவாகவே என் கையைப்பிடித்து நடத்தி சென்று ,நான் கீழே விழுந்து விடாமல் இருக்க கவனமாக கண்காணித்து தாய்ச்சி  சொல்லித்தந்தனர். ஆனால் இப்போது நீங்கள் 10 பேர் சேர்ந்த என்னை தள்ளினாலும் நான் விழமாட்டேன்.தாய்ச்சியில் எப்போதும் உடல் ஒற்றைக்காலில் நின்று பழகிவிட்டதால், மற்றவர்கள் தாக்கும்போது உடல் எப்போதும் உஷாராக இருக்க உள்ளுணர்வால் பணிக்கப்பட்டுள்ளது. என்னால் இப்போது தொடர்ந்து 5 மணி நேரம் தாய்ச்சி  செய்யமுடியும்.

ஆனால் இன்று என் நிலைமை ...? இந்தியாவில் நான்தான் தாய்ச்சியில் முதுகலைப்பட்டம் பெற்ற அதிக வயதான பெண்.! என் எண் தான், முது்கலைப்பட்டப படிப்பின் முதல் எண் . First Register in  india . இப்போ எனக்கு வயது 70 என்றால்,நீங்கள் நம்புவது கடினம்.  என்னைப் பார்த்தால்,உங்கள் மூளை எனது உருவத்துக்கு 70 வயது கொடுக்காது.
ஒரு நாளின் 20 நிமிட தாய்ச்சி தற்காப்புக்கலை, உங்கள் இறப்பை ஒவ்வொரு நாளும் குறைந்தது  ஓர் ஆண்டு  தள்ளிவைக்கிறது.

உங்களுக்கெல்லாம் ஒரு தகவல், புற்றுநோயின் போது , உடலில் உள்ள புற்று நோய் செல்களை சாகடிக்க, வேதி சிகிச்சை என்ற ஒரு சிகிச்சை தரப்பப்டும்,இது ஊசி மூல, செலுத்தப்படும் பல் மருந்துகளின் கலப்பு.இதில் மருந்து  ஏற்றுவது சுமார் 4=6 மணி நேரம் நடக்கும், ஒவ்வொரு 21 நாட்கள் இடைவெளியில். மிக மிககொடுமையான நிகழ்வுதான். அதன் பின்னர். அட்=ந்த மருந்து எந்த ஒரு புது செல்லும் உருவாமகாமல் பார்த்துக்கொள்ளும். இதனால், வாய், குரல்வளை, உணவுக்குழாய், வயிறு, குடல், மலக்குடல், குதம் எல்லாம் புண்ணாகிவிடும். உணவும் உண்ணமுடியாது. உணாவிட்டால் பரலோகம்தான்.. இதன் பக்க விளைவுகள் எலும்பு தேய்மானம், கால்சியம் வெளியீற்றம், நினைவுகள் அழிக்கப்படுதல் . இதையெல்லாம் இன்று தாய்ச்சி என்ற அற்புத தற்காப்புக்கலை என்னை நேராக்கி, வாழ்வை சீராக்கி, முன்பைவிட அதிகமாய் வாழ்க்கையில் ரன்  எடுக்க வைத்திருக்கிறது.

அது மட்டுமா., புற்றுநோயிலிருந்து மீண்டு, அதிக நாட்கள் வாழ்ந்துகொ ண்டிருப்பவர்களை ஊடகங்கள் தேடி மக்களுக்கு எப்படி புற்று நோயிருந்து தப்பிக்க என்ற ரகசியம் மக்களிடம் பேசும்போது, முக்கிய கண்ணியாக , மருந்துக்கு அடுத்து வருபவர். தாய்ச்சிதான்.

  இந்த போனஸ் வாழ்க்கையின் காரணி ,ராணி  கிரியா ஊக்கி தாய்ச்சி மட்டுமே. எனக்கு தாய்ச்சி சொல்லித்தந்த மாஸ்ட்டர்கள் ரவி & சிவாவுக்கும், தாய்ச்சிக்கு என்னை அறிமுகப்படுத்திய வினோவின் நண்பர் கோகுலுக்கும் கோடானு கோடி நன்றி சொன்னாலும் அது தீரவே தீராது. தினம் அங்கு என்னை அழைத்துச் செல்லும் சிவாஜி என்ற சிவகுமார், அவ்வப்போது மகன் ரபீக் இவர்களால் தான் நான் இன்னம் இந்த உலகில் சவடாலாக உலா வந்து கொண்டு.

நேற்று நான் ஒரு புது அவதாரம் எடுத்திருக்கிறேன்.. அதாவது தாய்ச்சியின் அடுத்த கட்ட உயர் செயல், saber  & knife ,நேற்றிலிருந்து saber (பட்டா கத்தியுடன் )தாய்ச்சி செய்தல் துவங்கியாச்சு.துவங்கும்போது , பயிற்சியில் காயம் ஏற்பட்டு விடலாம் என்று முதலில் மரத்தால் ஆன கத்தியால்  பயிற்சி.பின்னர் பட்டாக்கத்தியுடன் பயிற்சி. நான் துவத்திலேயே நன்றாக செய்வதாகவும், விரைவில் இதனையும் கற்றுக்கொள்வேன், தொடர்ந்து 15 நாட்கள் பழனியில் இருந்தால். ஒரு 5 நாட்கள இருப்பேன். இருப்பினும் இதிலும் வெள்ளாடிடுவோம்.

யாரடா மனிதர் அங்கே?

சின்ன சின்ன சிட்டுக்குருவி
செல்ல செல்ல சிட்டுக்குருவி
ஓடி வந்து தோளின் மேலே ஏறிக்கோ
குச்சி அடுக்கிகிட்டே சொல்லும்
 பாட்டைக் கேட்டுக்கோ

Sunday, August 28, 2016

Tuesday, October 30, 2012



Pl. come&Stay in  Palani  for 10 days.        பழனி -ல் 10 நாட்கள்  தங்கி  பின்வரும்  Form 8 and 28 வரை கற்று கொள்ளுங்கள்  அழையுங்கள் 9566909785




Monday, June 18, 2012

Saturday, January 21, 2012

நீங்கள் 40 வயதிற்கு மேற்பட்டவரா


பெரிய நகரங்களில் கூட கிட்டாத அரிய வாய்ப்பு தாய் சி என்னும் சீன உடற்பயிற்சி கலை- பழனியில்

  1. தியானம் கலந்த உடல் அசைவுகளால் ஆனது
  2. உடல் அசைவுகள் இயல்பானது
  3. பயிற்சி தொடக்கம் முதல் இறுதி வரை எளிமையானது இலகுவானது
  4. காலை நாள்தோறும் ஒரு மணி நேரம் பயிற்சி
  5. சந்தான கிருஷ்ணா திரைஅரங்கு பழனி
  6. சீனர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு தாய் சி ஒரு காரணம்
  7. பெண்கள் முதியவர்கள் அனைவர்க்கும் ஏற்ற பயிற்சி
  8. மருந்தில்லா மருத்துவம்
  9. நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது
  10. முதுகு வலி மூட்டு வலி இடுப்பு வலி படிப்படியாக குறையும்
  11. பல நோய்களுக்கு தாய் சி சவால்
  12. சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவு கட்டுபடுத்தப்படும்
  13. பெண்களுக்கு தனி இடபயிற்சி
  14. ரத்த அழுத்த நோய் படிபடியாக குறையும்
வாருங்கள் பயிற்சி பெறுங்கள் பலன் அடையுங்கள்
தொடர்பிற்கு 9566909785

Monday, August 1, 2011

TAI CHI

Tai chi is a slow motion and low impact exercise that promotes health, mind, body and mental relaxation. It is practiced as an effective exercise for health through a series of flowing, graceful and gentle postures and movements. The gentle flowing movements contain inner power that can strengthen the body, improve mental relaxation and mobilize joints and muscles. It is especially suitable as a therapy for arthritis because of the slow and gentle movements. Here are some of the benefits:

Tai chi improves balance, strength, and flexibility and lowers the risk of falls. A study from the Oregon Research Institute found that tai chi improves balance and reduces frequency of falls and risks of falling among older people.

Tai chi also reduces pain, stiffness, and stress and improves sleep quality. Researchers from Tufts University School of Medicine noted that patients over 65 years of age with knee osteoarthritis who practiced a 60-minute tai chi class, twice a week for 12 weeks showed a significant decrease in joint pain and stiffness compared with those in the control group.

Wednesday, July 20, 2011

எங்களுடன் தாய் சி பயிலும் திருமிகு மோகனா அவர்கள் Facebook ல் எழுதிய மடல்

தற்காப்பு கலையான "தாய் சி (tai chi)" என் இன்றைய வாழ்வில்..!

by Mohana Somasundram on Saturday, July 16, 2011 at 1:19am
பழனி, ஆலன் திலக் தாய் சி பயிற்சி  பள்ளியின் பயிற்சியாளர்கள்முன்னால், திருமிகு ராமன் & திருமிகு ரவி, பின் வரிசை திருமிகு சிவக் குமார் &திருமிகு.ஜவஹர்

தற்காப்பு கலையான தாய் சி.. நினைவுத்திறனுக்கும்..!


சீனாவில் தாய் சி

வணக்கம் நண்பர்களே..! நான் கடந்த இரு மாத காலமாய் "தாய் சி (thai chi)" என்ற சீன தற்காப்புக்கலையை கற்று வருகிறேன். தற்காப்புக் கலை என்றதும் ஏதோ, சண்டைக்குப் போக ஆயத்தம் பண்ணுகிறாப் போல தெரிகிறதா? என்ன உதைப்பது, குத்துவது, மோதுவது மற்றும் கட்டிப்புரள்வது என்றெல்லாம் கற்பனை ஓடுகிறதா நண்பா..! அப்படி எல்லாம் ஏதும் இல்லை. இது ஒரு மிக மிக மெதுவான, தாள லயம்/சந்தத்துடன் கூடிய ஒரு தியான உடல் அசைவுகள்தான். இதன் மூலம் மன அழுத்தம்/இறுக்கம் தளர்த்துதல், மன அமைதி,மோன நிலை, உடல் வலிமை,நினைவுத்திறன் மற்றும் கவன ஈர்ப்பு போன்ற நிகழ்வுகள் உண்டாகின்றன. இதுவே தற்காப்புக் கலையாகவும் திகழ்கின்றது.
தாய் சியின்.. விளக்க்கம்..!




"தாய் சி என்பது நம் மனத்துள் உறைந்திருக்கும், தற்காப்புக் கலை மற்றும் உடல்நல பயிற்சிகள் தொடர்பான, பழங்கால சீன தாவோ தத்துவம் (chineese thao philosophy) ஆகும். இன்று இக்கலை உலகம் முழுவதும் உள்ள பலகோடிக்கணக்கான மக்கள் உடல் ரீதியாக நல்ல தகுதி பெறவும், மனம் இறுக்கமற்று, மகிழ்வுடன் இருக்கவும், எதிராளி எப்போதும் நம்மைத் தாக்காமல் நாம் கவனமாக இருக்கவும் இந்த உடல் தற்காப்பு முறையைப் பயன்படுத்து கின்றனர்". . ... இவை சென்சாய் சந்திப் தேசாயின்(sensei Sandeep Desai ) கருத்துக்கள். இதுவே உண்மையும் ஆகும்.
தாய் சியின்... சரிதை..!



"தாய் சி சுவான் (Tai Chi Chuan)" என்பதன் பொருள் உச்சக்கட்ட இறுதி வலிமை/ஆற்றல்(Supreme ultimate force) என்பதே..! இதன் மூலம் ஒருவரால் ஆற்றலின் இரு பொருளையும்/ துருவங்களையும் சந்திக்க முடியும் என்று தெரிய வருகிறது. தாய் சியின் கதை புத்தரின் காலத்திலிருந்து துவங்குகிறது. இக்கலை கி.மு 600 க்கு முற்பட்டது. இது ஜென் (Zen) என்பதிலிருந்து அடி எடுத்து துவக்கப் பட்டிருக்கிறது... புத்தர் ஒரு தாமரை கையில் எடுத்த போது, லென்க்சியா மலையின் மேலிருந்து ஒவ்வொருவரையும் பார்த்து புன்னகைத்தாராம். அதன் பொருள் ஜியா யே என்பவரைத் தவிர வேறு யாருக்கும் புரியவில்லையாம். அவரே,புத்தரை நோக்கி புன்னகைத்து, புத்தரின் சீடராகிறார்." என்னிடம் ஒரு செல்வம்/புதையல் உள்ளது.இது உண்மையானது. ஆனால் இது யாரின் கண்களுக்கும் தெரியாது, ஆனால் இதனை உணரமுடியும் இதன் கருவூலத்தை ஜியா யே க்கு கொடுக்கிறேன்", என்றார். அந்த செல்வம் ஒரு இதயத்திலிருந்து, இன்னொரு இதயத்திற்கு நேரடியாக பாய்கிறது. இதுதான் தலைமுறை தலைமுறையாக ஜென் என்ற சொத்தாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என சீனர்கள் சொல்லுகின்றனர்.







மேற்கத்திய முறையில் இதனை அசைவுடன் உள்ள யோகா மற்றும் ஆழ்நிலை தியானம் இரண்டும் இணைந்தது என்றே கருதுகின்றனர். நீண்ட நாட்கள் சீனர்கள் இதனை ரகசியமாகவே வைத்திருந்தனர். தாய் சி பற்றிய புத்தகமும், பயிற்சியும், 20 ம் நூற்றாண்டு வரை பொதுமக்களுக்கு எழுத்து பூர்வமான எந்தப் பதிவு கிட்டவே இல்லை. இதனை அதுவரை, தாய் சி பற்றிய தகவல்களை மாணவர்கள், தனிப்பட்ட முறையில், வாய் வழியாகவே, ஆசான்/குருவிடமிருந்து அவரின் இல்லத்தில்/ வழிபாட்டுத் தளங்களில்/கோயில்களிலிருந்து கற்றுக் கொண்டனர். இதன் முதல் புத்தகம் தாய் சி சுவான் ( The Book of Tai Chi Chuan ) என்பதே. தாய் சியின் பயிற்சி என்பதுஉடல் நலத்துக்கும் மற்றும் , நீண்ட ஆயுளுக்கும் மிகவும் கை கொடுக்கிறது.
உடலின்..கடவுச் சீட்டு .. தாய் சி..!

Sarah Samson Sarah Samson, 103, a Fort Washington rsident, is part of Albert Einstein's Longevity Genes Project, which explores why people can live for so long and whether there can be a successful drug that mimics their genes for others. Bill Greiner conducts his research on Samson through a series of questionnaires and tests. Original Filename: CHU_AGE09.JPG103வயதிலும் தாய் சி செய்து, தாய்சி மூதாட்டி என்று புகழ் பெற்றவர்.
தாய் சியின் குறியீடு
உடல் வாத பாதிப்பில் உள்ளோர்க்கும் தாய் சியின் பலன்

ஒரு நாளில் வெறும் 15 நிமிட தாய் சி செயல்பாடு என்பது உங்களின் நல்ல உடல்நலம், தகுதி, மன அமைதி, மனம், உடல் இரண்டையும் ஒருங்கிணைத்து செய்யும் அற்புத திறமை போன்றவற்றை உருவாக்கி, தங்களின் நீண்ட வாழ்நாளுக்கு வழிகாட்டும் கடவுச் சீட்டுதான் தாய் சி. தொடர்ந்து தாய் சி பயிற்சியை செய்பவர்களுக்கு , அவர்களின் உடல் நலம் அதிகரிக்கிறது. தாய் சி யின் பலன் என்பது எண்ணற்றது.உடலுக்கு நோய் வராமலும் தடுப்பதாக கருதப் படுகிறது.
இதன் மூலம் கீழே குறிப்பிடும் நோய்களை கட்டுப்படுத்துகிறது என்ற தகவல் ஆராய்ச்சி வழியே நிரூபிக்கப் பட்டுள்ளது.
  • மிகை இரத்த அழுத்தம்
  • மனவழுத்தம்/இறுக்கம்
  • இதயப் பிரச்சினைகள்
  • தசை செயல்பாடு
  • நிற்கும் நிலை
  • சுவாசம்
  • உடல் சமன் நிலை
  • மேலும் இதன் மூலம் சர்க்கரை நோய், ஆஸ்துமா, பார்கின்ஸ் வியாதி,அறுவை சிகிச்சையின் பின் விளைவுகள், மூளை இரத்தக் குழாய் அடைப்பு போன்றவையும் ஓர் ஒழுங்க்குக்குள் வருகின்றன.
இதயத்தை, உயிரைக்காக்கும். தாய் சி..!
பழனியில் தாய் சி வகுப்பு



தாய் சி செய்வதனால்,ஒருவருக்கு கீல் வாதம், இதய அடைப்பு போன்றவைகளிலிருந்து விடுதலை கிடைக்கிறது. பக்க வாதம் வந்தவர்கள் தாய் சி செய்வதன் மூலம், உடல் செயல்பாடு சாதாரண நிலைக்கு வந்ததை கண்கூடாகப் பார்த்து அறிந்தேன். எனக்குவேதி சிகிச்சையால் எலும்பிலிருந்து கால்சியம் கரைந்து போயிருந்தது. மருத்துவர் இன்னும் 4 மாதத்திற்கு மேல் கொஞ்சம் கவனமாக இருங்கள். ஏனெனில், எலும்பின் கால்சியம் அதிகமாய் கரைந்திருப்பதால், கீழே விழுந்துவிட்டால், நிச்சயம் எலும்பு முறிவு ஏற்படும் என்றார். அப்படியும், காலில் சுண்டு விரலுக்கு அடுத்த விரலை ஒடித்துக் கொண்டு 2 மாதம் ஆகிறது. சரி யாக இன்னும் 3 மாதம் ஆகும் என்கிறார் மருத்துவர். இதுவே சாதாரண நபர் என்றால் அதிக பட்சம் ஒரு மாதத்தில் சரியாகி விடும்.
எனது உடலை.. உறுதியாக்கிய.. தாய் சி..!



பழனி தாய் சியில்.. முன் வரிசையில்,பயிற்றுநர்.. திருமிகு ராமன்,பின் வரிசை: திருமிகு சுரேஷ் & திருமிகு மோகனா

நான் கடந்த 2 மாதமாய் தாய் சி செய்வதன் பலனை முழுமையாய் அறிய முடிகிறது.முன்பெல்லாம் ஒருவரின் துணையின்றி ஒரு படிக்கட்டில் ஏறி, இறங்க முடியாது.. பயணம் செய்வது அயர்ச்சியை உண்டாக்கும். இப்போது நான் தாய் சி செய்வதால், எலும்பு உறுதியாகி வருவதை உணர முடிகிறது.அது மட்டுமல்ல, தாய் சி செய்ய போதுமான கவன ஈர்ப்பும் (concentration), நினைவுத் திறனும்(memory) வேண்டும். அது இன்றி தாய் சி செய்ய முடியாது. எனக்கு இவை அதிகரிப்பதை காண்கிறேன்.கடந்த இரு மாதங்களில் என் உடல் நலத்தில் அதிவேக முன்னேற்றத்தை உணர்கிறேன்.உடல் பலமாக மாறி இருக்கிறது. மற்ற பலன்களை போகப் போக அறிய/உணர முடியும்.அறுவை சிகிச்சை மருத்துவர் எனது இடது கையை 60 % மட்டுமே செயல் படுத்த முடியும் எனது கையில் சில தசைகளை வேட்டிவிட்டதால் என்றார். இப்போது எனது இடக் கை 100 % வலது கை போலவே செயல்படுகிறது.. இக்கலையின் மூலம் உடலின் அனைத்து தசைகளும் செயல்படுகின்றன . ஒருவர் இதனை செய்து பார்த்துதான் அதன் பலன்களை உணர முடியும் . அதனை சொல்லல் வெளிப்படுத்த இயலாது. தாய் சி ஒரு நாள் செய்யாவிட்டாலும், அன்றைய தினம் சுறு சுறுப்பாய் இருக்காது.
இந்தியாவில்.. தாய் சி..மையம்..!
பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை &பண்பாட்டுக் கல்லூரியில் தாய் சி வகுப்பு

பழனியின் பயிற்சி ஆசிரியர் திருமிகு ராமன் அவர்கள்
பயிற்சியாளர் திருமிகு. ரவி

தாய் சி பயிற்சி இந்தியாவில் குறைந்த இடங்களில் மட்டுமே நடத்தப்படுவதாய் தெரிகிறது. முக்கியமாக் டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் மதுரையில்உள்ளது.இதில் தமிழ் நாட்டில் தாய் சி சொல்லிக் கொடுக்கும் பங்கை சிறு நகரான பழனியும் செய்கிறது.இந்த தாய் சி பள்ளியின் பெயர் ஆலன் திலக் கராத்தே & தாய் சி பள்ளி. மற்ற இடங்களில் வாரத்தில் இரு நாட்கள் மட்டும்தான் பயிற்சி. பயிற்சி கட்டணம் டெல்லியில் ரூ. 10 ,௦00/=. மற்ற இடங்களில் 3,௦௦௦ த்துக்கு மேல். ஆனால் பழனியில் கட்டணமும் குறைவு, சொல்லித்தரும் நாட்களும் அதிகம். ஆம் வாரத்தின் 7 நாட்களும் தாய் சி பயிற்சி தரப்படுகிறது.கட்டணம் ரூ 250 /= மட்டுமே. இந்த பயிற்சி வகுப்பு தினமும் சந்தான கிருஷ்ணா திரையரங்க வளாகத்தில்,காலை 6 .30 - 8 . 00மணி வரை நடக்கிறது. இப்பள்ளியில் பயிற்சி தரும் திருமிகு ராமன் என்ற, பயிற்சி ஆசிரியர் வாரம் இருமுறை விடுமுறை நாட்களில் மதுரையிலிருந்து வந்து பயிற்றுவிக்கிறார். மற்ற நாட்களில் பழனியிலே உள்ள திருமிகு. ரவி மற்றும் திருமிகு. சிவகுமார் இருவரும் தாய் சி பயிலும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கின்றனர். இங்கு 20 வயதிலிருந்து 65 வயது வரை உள்ளவர்கள் தாய் சி பயிற்சி எடுத்துக் கொள்கின்றனர். இங்கு தாய் சி பயிற்சி பெரும் ஒரே பெண் திருமிகு மோகனா மட்டுமே. சீனாவில் 100வயதுக்கு மேற்பட்ட முதியோர்களும் தாய் சி யை அனாயாசமாகச் செய்கின்றனர். இது செய்வதன் மூலம் எனது வாழ் நாள் இன்னும் 20 ஆண்டுகள் அதிகரிக்கும் என நம்புகிறேன்.

Tuesday, July 5, 2011

தாய் சி



                 Learning Tai Chi is not a one-day process, it is about repetition and practicing moves that can only be perfected over time with a lot of hard work. Here's how you should proceed:

- Aim at practicing two moves together, then head on the next move. The more the number of repetitions, the better your body responds to it.

- It is a must to keep your head straight when practicing Tai Chi as it helps in maintaining balance. The chi node right at the top of your head is a central meeting point for the meridian lines of the body which helps in releasing negative energy from the body.

- Also, make sure that you keep your back straight as it helps in accumulation of energy in your stomach. Your core forms the centre of gravity when performing Tai Chi.

- Keep distance between your toes. This help in maintaining correct balance, particularly when you are standing on one leg.

- Go for fluid motions and avoid jerky movements when performing Tai Chi. Finish each move so smoothly that the next move merges perfectly with the earlier one.

- Breathe out when you are making an outward movement and breathe in when you are making an inward movement.

Saturday, March 26, 2011

The benefits of practicing Tai Chi



Tai Chi is a component of traditional Chinese medicine that is believed to increase strength and promote calm and harmony by improving the flow of the internal energy throughout the whole body. Tai Chi has a calming and meditative effect that makes it particularly helpful for reducing stress and anxiety. Many people who have done Tai Chi regularly have experience the improvement of general well-being.
The benefits of practicing Tai Chi are unlimited. Tai Chi can be used as a preventive health measure, to maintain good health and/or to help with a specific disease.
Here are some of general areas of the benefits that are most commonly recognized and most thoroughly researched:
  • Blood Pressure
  • Hypertension
  • Heart
  • Musculature
  • Posture
  • Breathing
  • Lymphatic System
  • Balance
The following are some examples of medical conditions that may be alleviated or possibly avoided by practicing Tai Chi chuan
  • General Mobility and Balance Problems
  • Diabetes
  • Parkinson’s disease
  • Asthma
  • Post Traumatic Stress
  • Strokes